மேலும் ஒருவருக்கு ஆறு மாதம்!



 இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், கைது செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்கள் இன்று நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


கடந்த 7ஆம் திகதி இரண்டு படகுகளில் பிரவேசித்த 19 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.


இதன்போது, கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் இன்றைய தினம் வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.


இந்தநிலையில், குறித்த வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது, எல்லை தாண்டி வந்த 18 இந்திய மீனவர்களும் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனையில் விடுவிக்கப்பட்டனர்.


அதேநேரம், படகு ஓட்டுனர் ஒருவருக்கு 6 மாதகால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments