வாக்குவாதம்: தந்தையையும் மாமாவையும் கொன்ற இளைஞன்
ஜேர்மனியின் ஹாம்பர்க் மாவட்டத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று இன்று சனிக்கிழமை காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாக்குதலாளி 32 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டார். நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் தாக்குதலாளிக்கும் 58 மற்றும் 61 வயதுடைய இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றது.
கொல்லப்பட்டவர்கள் கொலையாளியின் மாமா மற்றும் தந்தை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொலையாளியைப் பிடிப்பதற்கு வெள்ளிக்கிழமை மாலை லோப்ரூக் மற்றும் ஹார்ன் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளைத் தேடுவதற்கு அரசு வழக்கறிஞர்கள் உத்தரவிட்டனர்.
சந்தேசக நபர் காவல்துறையினரால் காவலில் வைக்கப்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
Post a Comment