காணி கொடுக்க சொல்கிறார் ஹரின்

 


கிளிநொச்சி மாவட்டத்தின்  கரைச்சி பிரதேச செயலாளர்  பிரிவில் பொதுஜன பெரமுன (SLPP)  அமைப்பாளர் தம்பையா தர்மசிறி என்பவருக்கு நீண்டகால குத்தகையில் அரச காணியை பெற்றுகொடுக்குமாறு அமைச்சர்  ஹரின் பெர்னாண்டோ சிபாரிசு செய்துள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது 

போரினால் பாதிக்கபட்ட சாதாரண  மக்கள் காணிகளை பெற்று கொள்ள பல காலமாக காத்திருக்கும் போது எந்த நடைமுறைகளுமின்றி ராஜபக்சே கட்சியின் பிரமுகர் ஒருவருக்கு அரசு நிலங்களை அமைச்சர் ஒருவரின் சிபாரிசில் பெற்று கொடுப்பது அனுமதிக்க  முடியாத மோசடியாகும் என பொது அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளன.

No comments