மூடப்பட்டது யாழ்பொதுநூலகம்!
யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் சர்வதேச பிரபலங்கள் பொதுநூலகத்திற்கு வருகை தந்து புகைப்படம் எடுத்துக்கொள்வது வழமையாகும்.அவ்வாறு வருகை தரும் போதெல்லாம் பொதுநூலகத்தை மூடிவிடுவது யாழ்.மாநகரசபையின் பணியாகும்
இவ்வாறு இன்றும் பொதுநூலகத்தை மூடி பிரிட்டனிற்கு விசுவாசத்தை காண்பித்துள்ளது யாழ்.மாநகரசபை.
இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று வியாழக்கிழமை (11) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விசேட உலங்கு வானூர்தி மூலம் வருகை தந்த இளவரசி, யாழ்ப்பாணம் நாவாந்துறை பொது மைதானத்தில் தரையிறங்கிய போது, வடக்கு மாகாண ஆளுநரான பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுக்கு வரவேற்பு அளித்திருந்தார்.
முன்னதாக பிரித்தானியாவின் இளவரசி ஆன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த இளவரசி ஆனி உள்ளிட்ட அரச தூதுக்குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோருடன் இணைந்து சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டனர்.
நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment