ஒதியமடு:இடையில் புகுந்தது காவல்துறை



ஒதியமலைப் பகுதியில் ஒதியமலை படுகொலை நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் திடீரென காவல்துறையினர் புகுந்து குழப்பம் விளைவித்துள்ளனர்.

ஒதியமலைப் படுகொலையின் 39 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (02) ஒதியமலை சனசமூகநிலைய வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.

ஒதியமலைப் பகுதியில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதி அதிகாலை வேளையில் புகுந்த இராணுவத்தினரும், சிங்களவர்களும் ,அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் ஆண்களை சனசமூக நிலையத்திற்கு வரவழைத்துவிட்டு அவர்களது ஆடைகளை களைந்து அவற்றினால் அவர்களை கட்டி 27 பேரை சுட்டும், வெட்டியும் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்திருந்தனர்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(02) நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகி நிகழ்வு அமைதியாக  இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென நுழைந்த இலங்கை காவல்துறையினர் ஒலிபெருக்கி பாவிப்பதற்கான அனுமதிப்பத்திரம் பெறவில்லை என தெரிவித்து நிகழ்வில் குழப்பத்தை விளைவித்தனர்.



No comments