வடகிழக்கில் சர்வதேச மனித உரிமைகள் தினம்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி வடகிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்ப அமைப்புக்கள் பரவலாக இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டங்களை நடாத்தியுள்ளன.
அதேவேளை மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் மன்னார் பஜார் பகுதியில் திங்கட்கிழமை (11) காலை 11 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற அரச காணிகள் கொள்ளை தொடர்பாக நீதியை பெற்றுத் தருமாறு போராட்டகாரர்கள் கோரியிருந்தனர்.
அத்துடன் கடல் வளம் முறையற்ற நிலையில் அழிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் இந்திய டோலர் படகுகள் எமது மீனவர்களின் தொழிலை சிதைக்கின்றனர். கடற்றொழில் அமைச்சானது தெற்கில் மீனவர்களின் வாழ்வாதாரங்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போதிலும் வடக்கு மீனவர்கள் மிகவும் ஒடுக்கப் படுகின்றார்கள்” என குற்றச்சாட்டினர்.
இதனிடையே திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழு காரியாலயம் முன்பதாகவும் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.
வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு, வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளின் சங்கம் இணைந்து போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
“நீதியான சர்வதேச பொறிமுறை விசாரணை தேவை”, “உரிமைகளே இல்லாத நாட்டில் எதற்கு மனித உரிமைகள் தினம்”, “எமது உறவுகளை காணாமல் ஆக்கப்பட்டு பல வருடங்கள் கடக்கின்றது”, “நீதி இல்லை”, ஆகிய ஸ்லோகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கவனயீர்ப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Post a Comment