எட்டு மாதத்தின் பின்னர் ரங்கா வெளியே!
கொழும்பில் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீவைத்ததாக புதிய குற்றஞ்சாட்டினை எதிர்கொண்டுப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீரங்காவுக்கு, வவுனியா மேல் நீதிமன்றம், இன்று பிணை வழங்கியுள்ளது.
ரங்காவை கைதுசெய்யுமாறு, பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு, வவுனியா மேல் நீதிமன்றம், கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பான வழக்கின் சாட்சி ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக, நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்தது.
அதனையடுத்து, கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த ரங்கா, கடந்த மார்ச் மாதம் கைதுசெய்யப்பட்டு, வவுனியா மேல் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதுடன், கடந்த 8 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவரது வழக்கு, இன்று, வவுனியா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிணை வழங்கப்பட்டது.
Post a Comment