கேரளாவில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி!! 52 காயம்!!
இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கில் இன்று காலை திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 52 படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இக்குண்டுவெடிப்பு சம்பவத்தில் 52 பேர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழந்த நபர் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியுள்ளார்.
இக்குண்டு வெடிப்பு தொடர்பில் விசாரணைகளை நடத்த இந்தியாவின் உள்ளக புலனாய்பு அமைப்பான என்.ஜ.ஏ சம்வப இடத்திற்கு விரைந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றும் கேரள தலைமைக் காவல்துறை பொறுப்பாளர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொடக்கரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், தானாக ஒருவர் சரணடைந்துள்ளார். வெடிகுண்டு வைத்தது நான்தான் எனக்கூறி அவர் தற்போது சரணடைந்துள்ளார்.
அந்த நபரை காவல்துறையினர் முழுவதுமாக நம்பவில்லை என்றாலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரின் பின்னணி என்ன என்பது குறித்தும், குண்டுவெடிப்புக்கும், இவருக்கும் எதாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர்.
இதற்கிடையில், சந்தேகத்தின் பேரில் கண்ணூரில் வசிக்கும் குஜராத்தை சேர்ந்த ஒருவரை காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் என மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.
Post a Comment