நீதிபதிக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!



நாட்டை விட்டு வெளியேறியதாக சொல்லப்படும் முல்லைதீவு நீதிபதியின்  இருப்பிடத்தை அறிய தென்னிலங்கை கட்சிகள் முதல் புலனாய்வு கட்டமைப்புக்கள் வரை பெருமுயற்சி எடுத்துவருகின்றன.

இந்நிலையில்  நாளைய தினம் திங்கள் கிழமை (09.10.2023) காலை 09:30 மணிக்கு கொழும்பு உயர்நீதிமன்ற முன்றலில் சட்டத்தரணிகள் போராட்டமொன்றை நடாத்தவுள்ளனர்.

முல்லைத்தீவு நீதிபதி கௌரவ ரீ. சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும்,  நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தக் கோரியும் இந்த மாபெரும் கண்டனப் போராட்டம் நடாத்தப்பட இருக்கின்றது.

வடக்குக் கிழக்கின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பெருமளவிலான சட்டத்தரணிகளும் தென்பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணிகளும் இப்போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments