இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த வடக்கு ஆளூநர்


வட மாகாண ஆளுநர் பி. எஸ்.எம். சார்ள்ஸ் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை கொழும்பில் சந்தித்தார்.

சந்திப்பின் போது, வடக்கின் எதிர்கால வளர்ச்சி குறித்து தாம் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் பற்றி விளக்கி கூறினார். அதே வேளையில் இந்திய அரசாங்கம் கடந்த காலங்களில் வழங்கிய ஆதரவிற்கு தமது நன்றியினை ஆளூநர் தெரிவித்தார். 

அதற்கு உயர் ஸ்தானிகர்,  வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் வடக்கின் அபிவிருத்திக்கும் தங்களது தொடர்ச்சியான ஆதரவு உறுதி என உறுதி அளித்தார். 


No comments