முல்லைத்தீவு தேராவிலில் திலீபன் நினைவேந்தலின் முதலாம் நாள் ஆரம்பம்

 

தியாகதீபம் திலீபன்  அண்ணா அவர்களின் 36ம் ஆண்டு நினைவுநாள் இன்று ஆரம்பம்.

தியாகதீபம் திலீபன்  அண்ணா அவர்களின் 36ம் ஆண்டு நினைவேந்தல்  இன்று விசுவமடு தேராவில் புதியநிலா விளையாட்டு மைதானத்தில் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியது. திலீபன் அண்ணா உண்ணா நோன்பை ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணிக்கு மாவீரரின் பெற்றோரின் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும் முல்லைத்தீவு மாவட்ட சமூக செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும்  அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.


No comments