செல்வத்திற்கு வந்து சேர்ந்த சந்தேகம்!
வடகிழக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவது, இராணுவம் பல இடங்களை பிடிப்பது மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைமீறல் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என தென்னிலங்கை தலைவர்கள் கோரும் நிலையில், குறிப்பாக ஒரு விடயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இலங்கை அரசாங்கம் அதாவது கோட்டபாய ஜனாதிபதியாக இருக்கும் போதும், அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கும் போதும் பல கொடுமைகளை எங்களது மக்களுக்கு இழைத்திருக்கின்றார்.
பல இன்னல்களையும், மனிதவுரிமை மீறல்களையும் அவர் செய்துள்ளார். அந்தக் குடும்பம் மற்றும் அதில் சம்மந்தப்பட்டவர்கள் அத்தனை பேரும் சர்வதேச விசாரணையில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் கிடப்பிலே உள்ளது. அப்படி ஒவ்வொரு இடத்திலும் மனித எச்சங்களை கண்டுபிடித்து கிடப்பில் போடும் நிலை தான் காணப்படுகிறது.
சர்வதேச விசாரணையை தமிழ் மக்கள் கோருகின்றார்கள். அந்தவகையில் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கபடும் வகையில் தென்னிலங்கையில் உள்ளவர்களும் மனச்சாட்சிப்படி நடக்க வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
Post a Comment