21ம் திகதி மீண்டும் அகழ்வு ஆரம்பம்!

  


முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி அடங்கிய குழுவினர், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில், இன்று கள விஜயம் மேற்கொண்டனர்.

கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை, நேற்று முன்தினம், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டு, அதில் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய, இன்று கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணி எதிர்வரும் 21ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என உத்தேச தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் மனித புதைகுழி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதை போன்று சந்தேகத்திற்கிடமான பிரதேசத்தை பார்வையிடுவதற்கு அழைக்கப்பட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்திருந்தார்கள்.

தொல்பொருள் திணைக்களத்தால் மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான பாதீடும், திட்டமும் ஒரு கிழமைக்குள் நீதிமன்றுக்கு தாக்கல் செய்யப்படும் .அதனைத் தொடர்ந்து 21ஆம் திகதி அகழ்வு பணி நடைபெற தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. 


No comments