தேர்தல் ஆண்டு:எந்த தேர்தல் தெரியாது!



அடுத்த வருடம் முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம்.ஆனால் அதற்கு முன்னதாக நடத்தப்படவேண்டிய மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி சபை தேர்தல்கள் பற்றி அரசு மௌனம் காப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே  தேர்தல் ஆண்டாகவே இருக்கும் என நான் நினைக்கின்றேன். இப்போது எம்மை விமர்சித்து வீரவசனம் பேசுவோர் தேர்தல் காலங்களில் தோல்வியடைந்தே போவார்கள் என் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் விவகாரம் குறித்து பேசிய அவர், தேர்தலை நடத்த அரசு அஞ்சவில்லை. நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்து இருக்கும்போது தேர்தலை எப்படி நடத்துவது? நாடு இப்போதுதான் மெல்ல மெல்ல மீண்டெழுந்து வருகின்றது. இந்த உண்மை நிலை எதிர்க்கட்சிகளுக்கு விளங்கும்.

பெரும்பாலும் அடுத்த வருடம் தேர்தல் வருடமாகவே இருக்கும் என நான் நினைக்கின்றேன். எந்தத் தேர்தல் முதலில் நடைபெறும் என்று இப்போது கூற முடியாது. ஆனால், அடுத்த வருடம் தேர்தல் ஆண்டு என்பது நிச்சயம்.

இப்போது எம்மைக் கண்டபடி விமர்சித்து அரசியல் மேடைகளிலும், ஊடகங்கள் முன்னிலையிலும் வீரவசனம் பேசுவோர் தேர்தல் காலங்களில் தோல்வியடைந்தே போவார்கள். மக்களை அவர்கள் முட்டாளாக்க முடியாது.” – என்றார்.


No comments