டக்ளஸ் சீனாவில்!



இந்தியாவிற்கான இரகசிய பயணத்தை தொடர்ந்து சீனாவில் நடைபெறவுள்ள சுற்றுசூழல் தொடர்பான மாநாட்டில்  இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கெடுக்கவுள்ளார்.

குறித்த மாநாட்டில் இந்திய பிரதிநிதிகளும் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்தியா மற்றும் சீனா உட்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஒன்றாக கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தினை இந்த மாநாடு ஏற்படுத்தி தரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, நாட்டின் வளமான எதிர்காலத்திற்காக கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments