துறைநீலாவணையில் கறுப்பு ஜீலை!
கறுப்பு யூலை தின நிகழ்வு துறைநீலாவணையில்; இடம்பெற்றுள்ளது. இதன்போது யூலைக்கலவரத்தில் உயிர் நீத்தவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றது.
மீண்டும் ஓர் கறுப்பு ஜூலைக்கு அரசு வித்திடுகின்றது. பொலிஸ் அதிகாரம் இல்லாத 13 திருத்த சட்டத்தில் நாம் எவ்வாறு எமது மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு நடவடிக்கை எடுத்து பாதுகாக்க முடியும்.
இந்நிகழ்வில் அம்பாரைமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன் ஞா.சிறிநேசன் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் காரைதீவுப் பிரதேசசபை தவிசாளர் கி.ஜெயசிறில் தமிழசுக்கட்சியின் இளைஞர் அணித்தலைவர் உட்பட தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment