நாவாந்துறையில் மோதல் - பலர் காயம்

 


யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் சிலர் காயமடைந்துள்ளதுடன் அப்பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோதல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிரதேச செயலருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும் குறித்த பகுதியில் பொதுப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதோடு போத்தல்கள் உடைக்கப்பட்டு பொதுமக்கள் வீதியில் பயணிக்க முடியாதவாறு பதற்ற நிலை நிலவுகின்றது.

No comments