மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்


உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களின் உயர் கல்விக்காக வட்டியில்லா கடனுதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு இந்தக் கடன் வழங்கப்படவுள்ளது.

இதற்காக தகுதி வாய்ந்த 5,000 மாணவர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் அடுத்த மாதம் 07 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தனியார் பல்கலைக்கழகங்கள் மூலம் தொழில் சார்ந்த படிப்புகளை மேற்கொள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

No comments