ஆக்சிஜன் தீர்ந்ததால் மீட்பு நடவடிக்கையில் நம்பிக்கை குறைந்தது!


அட்லாண்டிக் பெருங்கடலில் டைட்டானிக்கின் சிதைவுக்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன டைட்டானைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பா முழுவதிலும் இருந்து கப்பல்கள் இணைந்துள்ளன. மீட்புக் குழுவினர் கப்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த ஐந்து பேரையும் உயிருடன் மீட்கும் நம்பிக்கை மங்குகிறது. ஏனெனில் ஆக்ஸிஜன் விநியோகம் தீர்ந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை நீருக்கடியில் இடிக்கும் சத்தம் கேட்டதையடுத்து, விமானம், கப்பல்கள், படகுகள் மற்றும் தொலைதூரத்தில் இயக்கப்படும் சிறிய தானியங்கி நீர்மூழ்க்கிக் கப்பல் ஊடாகவும் ஐந்து காணாமல் போன நீர்மூழ்க்கிக் கப்பலைத் தேடும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அவர்கள் 26,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் தேடிக் கொண்டுள்ளனர்.

நீருக்கடியில் ரோபோக்கள் பொருத்தப்பட்ட ஒரு நார்வேகன் படகும், பிரான்சில் இருந்து மற்றொரு கப்பலும், கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிமீ தொலைவில் டைட்டனின் கடைசியாக அறியப்பட்ட இடத்தைத் தேடி வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை இரவு கார்பன்-ஃபைபர் கப்பல் காணாமல் போனதாக கனேடிய அதிகாரிகள் அறிவித்தனர், இது சர்வதேச மீட்பு முயற்சியைத் தூண்டியது.

டைட்டானிக் கல்பலின் சிதைவுகளை நீருக்கடியில் பார்வையிடச் சென்றபோது நீர்மூழ்கிக்கப்பலின் ஓட்டி, ஒரு புகழ்பெற்ற பிரிட்டிஷ் சாகசக்காரர், இரண்டு பாகிஸ்தானிய வணிக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒரு டைட்டானிக் தலைமை நிர்வாகி என ஐவர் இருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் டைட்டனுக்கு 96 மணி நேர ஆக்சிஜன் உதவி இருந்தது தற்போது அது தீர்ந்துவிட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

No comments