ரணிலும் துரோகியானார்!



முல்லைத்தீவு குருந்தூர்மலைப் பகுதியிலுள்ள காணிகள் சிங்களவர்களுக்கு சொந்தமானது என பேராசிரியர் எல்லாவல மேதானந்த தேரர் எழுதிய கடிதத்தை ரணில் விக்ரமசிங்க ஆமோதித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டித்துள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் முல்லைத்தீவு குருந்தூர்மலைப் பகுதியில் இருந்து தமிழ் மக்களை பலவந்தமாக வெளியேற்றிவிட்டு, அங்கு சிங்களவர்களை குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

முன்னதாக “நிறைவேற்று அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக நான் ஆளும் தரப்பு பங்காளிகளுடனும், எதிரணியிலுள்ள கட்சிகளுடனும் கலந்து பேசாமல் எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாது.

‘இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் பேச்சு தொடர்பில் நம்பிக்கையீனத்தை வெளியிட்டுள்ளமை தொடர்பில் ரணில் கருத்து வெளியிடுகையில் “அரசியல் தீர்வு பேச்சு முன்னெடுக்கப்படும் நிலையில் ஆளும் தரப்பிலுள்ள கட்சிகளிடத்திலிருந்தும்  எதிரணியிலுள்ள கட்சிகளில் இருந்தும் எதிர்ப்புக்கள் வரும். தற்போதைய நாடாளுமன்றம் ஆளும் தரப்பிலும், எதிரணியிலும் பல கட்சிகளைக் கொண்டு அமைந்துள்ளது.

சகல கட்சிகளுடனும் நாடாளுமன்றத்துக்குள்ளும் பேசி வெளியிலும் பேசி அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை விரைந்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.” – என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.


No comments