திட்டமிடாத நிலையில் இறுதி நேரத்தில் ஜி ஜின்பிங்கைச் சந்தித்தார் பிளிங்கன்


தாய்வான் விவகாரத்தில் அமொிக்காவின் தலையீடுகளை அடுத்தும் சில பொருளாதாரத் தடைகள், சீனாவின் உளவு பலூன் விவகாரம் போன்ற பல விடயங்களால் சீனா - அமெரிக்க இடையே வளர்ந்துவந்த பதற்றங்கள் மத்தியில் சீனா சென்றிருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இன்று திங்கட்கிழமை சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அத்துடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுக்கு விருத்தையும் சீன அதிபர் ஜி ஜின்பிங் அளித்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை அது நடக்கும் என்று இரு தரப்பும் உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில் தான் சந்திப்பு இறுதியில் நடத்தப்பட்டது. சீன அதிகாரிகளுடன் இரண்டு நாட்கள் உயர்மட்ட பேச்சுவார்த்தையின் உச்சகட்டம் இது கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சந்திப்பிலும், வேறுபாடுகளை பொறுப்புடன் நிர்வகிப்பதற்கும், போட்டி மோதலில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் மூத்த மட்டங்களில் நேரடி ஈடுபாடும் நீடித்த தொடர்பும் சிறந்த வழி என்று நான் வலியுறுத்தினேன் என்று பிளிங்கன் செய்தியாளர்களிடம் கூறினார். 

எனது சீன சகாக்களிடமிருந்து நான் அதையே கேள்விப்பட்டேன். எங்கள் உறவை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நாங்கள் இருவரும் ஒப்புக்கொள்கிறோம்.

உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகள் இடையேயான உறவுகள் பதற்றமான நேரத்தில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் அமெரிக்க அதிகாரி ஒருவர் சீனாவிற்கு மேற்கொண்ட மிக உயர்ந்த அளவிலான பயணத்தை பிளிங்கனின் பயணம் குறிக்கிறது.

இந்தப் பயணம் சுமூகமான உறவுகளுக்கு உதவும் என்று தான் நம்புவதாக ஜி பிளிங்கன் கூறினார்.

இரு தரப்பும் நேர்மையான மற்றும் ஆழமான விவாதங்களை நடத்தியது சீன அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கருத்துக்களில் சந்திப்பின் தொடக்கத்தில் ஜி கூறினார்.

எப்போதும் பரஸ்பர மரியாதை மற்றும் நேர்மையின் அடிப்படையில் தொடர்பு இருக்க வேண்டும் என்று ஜி கூறினார்.

நேற்று சீனாவின் வெளியுறவு அமைச்சர் சந்தித்த மெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் 6 மணி நேரங்கள் பேச்சு வார்த்தைகளை நடத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

No comments