யாழில். மைத்திரி


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் வியாழக்கிழமை காலை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தினை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

அதனை தொடர்ந்து, ஆரியகுளம் நாகவிகாரைக்கு சென்ற மைத்திரிபால சிறிசேன, விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நாக விகாரதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன, மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். 

 யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள மைத்திரிபால சிறிசேனா, எதிர்வரும் மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு பொது நிகழ்வுகளிலும், சந்திப்புகளிலும் ஈடுபடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 




No comments