கட்டுநாயக்க விமான நிலயத்தில் 3 கிலோ தங்கத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் கைது!


புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 3.5 கிலோகிராம் எடையுடைய தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து வருகைத் தந்த நிலையிலேயே அலி சப்ரி ரஹீம் சட்டவிரோதமாக தங்கம் கொண்டுவந்துள்ளளார் என தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தற்போது சுங்கப்பிரிவினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments