இது கைதடி கர்ஜனை!



இலங்கையில் இனப்படுகொலை செய்த படையினரை நினைவுகூரும் நினைவுத் தூபியில் தமிழர்களையும் நினைவு கூருவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.

வுடமாகாணசபை அவைத்தலைவர் அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் 

இனவாதியான சரத்வீரசேகர அண்மைக்காலமாக தமிழ் மக்களை மிரட்டும் தொனியில் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

அவர் அவ்வாறு வெளியிடும் கருத்துக்களை இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.

அனைத்து இனத்தவர்களும் நினைவு கூருவதற்கான பொதுவான நினைவுத்தூபி அமைக்கும் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.

பொதுநினைவுத்தூபி என்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை வெகுவாகப் பாதிக்கும் செயற்பாடு” - என்றார்.


No comments