இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் போராளிக் குழுத் தலைவர் பலி!


இஸ்ரேல் - காசா இடையே மோதல்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் காசாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

இத்தாக்குதலில் பாலஸ்தீனிய போராளிக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத்தின் ரொக்கெட் உந்துகணைப் பிரிவின் தலைவரான அலி காலி மற்றும் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பும் உறுதி செய்துள்ளன. 

பாலஸ்தீன போராளிகள் நேற்றுப் புதன்கிழமை 400க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவியதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெரும்பாலான ரொக்கெட்டுகள் இடைமறித்து அழித்ததாகவும் சில ரொக்கட்டுகள் திறந்வெளிப் பகுதிகளில் விழுந்து வெடித்துள்ளன. தெற்கு இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்களால் நான்கு வீடுகள் சேதமடைந்தன என இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments