இலங்கை:எல்லாலமுமே விற்பனையில்!

 


யாழ்ப்பாணத்திலிருந்தான விமான சேவை மற்றும் காங்கேசன்துறையிலிருந்து தூத்துக்குடிக்கான கப்பல் சேவையென இந்தியா காலுன்றிவருகின்ற நிலையில் சிறீலங்கன் விமானசேவை நிறுவனத்தை இந்தியாவின் ‘டாடா நிறுவனத்திற்கு’ மாற்றுவது தொடர்பில் அரச தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகக் குழுவான 'டாடா நிறுவனம்' ஏயார் இந்தியா நிறுவனம் உட்பட பல விமான நிறுவனங்களின் வணிகத்தை இன்னும் நடத்தி வருவதாகவும், அந்த நிறுவனம் சிறீலங்கன் ஏர்லைன்ஸ் மீதும் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் நஸ்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் சிறீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனமும் ஒன்று என்பதுடன், அந்நிறுவனத்தை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது

ஏற்கனவே சூரிய சக்தி திட்டம், இந்தியா மற்றும் இலங்கை இடையே படகு சேவை மற்றும் வடக்கில் மூன்று தீவுகளில் சூரிய சக்தி மின் திட்டங்கள் இந்திய முதலீட்டில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments