தமிழருக்கு நினைவு சின்னம் கூடாது!

 


அனைத்து மக்களையும் நினைவு கூரும் வகையில் நினைவுத்தூபி அமைப்பது அவசியமில்லை, மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் பயங்கரவாத குழுக்கள் (?) மற்றும் படையினருக்கு சமமான ஒரு நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பில் தன்னால் உடன்பட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டு அமைதியின்மை காரணமாக உயிரிழந்த பொதுமக்கள், ஆயுதப்படை உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் மற்றும் முன்னாள் போராளிகள் உட்பட அனைவரையும் நினைவுகூரும் வகையில் கொழும்பில் தெரிவுசெய்யப்பட்ட இடமொன்றில்  நினைவுச் சின்னம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இந்நிலையில்,  முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments