யாழில்.பாடசாலை மாணவியுடன் சேட்டை விட்ட இராணுவ சிப்பாய் பொதுமக்களால் நயப்புடைப்பு!


யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை பாடசாலை முடிந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்த மாணவியிடம் அங்க சேஷ்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயை அப்பகுதிமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பலாலிப் பொலிஸார் மற்றும் இராணுவப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.தனிமையில் சென்ற பாடசாலை மாணவியை பின்தொடர்ந்த குறித்த இராணுவ சிப்பாய் அங்கசேஷ்டையில் ஈடுபட்டுள்ளார். 

இதனால் மாணவி குரலெழுப்பிய நிலையில் அங்கு கூடிய பொதுமக்கள் குறித்த இராணுவ சிப்பாயை நையப்புடைத்து பொலிஸில் ஒப்படைத்தனர்.

No comments