யாழில்.தமிழரசு கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் மோதல் - ஒருவர் வைத்தியசாலையில்


இலங்கை தமிழரசு கட்சி கூட்டத்தில் தன் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.  

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டம் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. 

அதன் போது , தாக்குதலுக்கு இலக்கானவருக்கும் , கட்சியின் மற்றுமொரு உறுப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதை , அடுத்து அந்நபர் இவர் மீது கைகளால் தாக்கியுள்ளார். 

அதனை அடுத்து தாக்குதலுக்கு இலக்கானவர் பொலிஸ் நிலையம் சென்று தாக்குதல் தொடர்பில் முறைப்பாடு செய்த பின்னர் , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்ந்துள்ளார். 

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

No comments