திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக கடமையேற்கின்றார் சார்ள்ஸ்


புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

குறித்த தினம் காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

முன்னாள் வடமாகாண ஆளுநராக கடமையாற்றிய ஜீவன் தியாகராஜா 15ம் திகதி ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனை அடுத்து 17 ம் திகதி பி.எஸ்.எம்.சாள்ஸ் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

No comments