இறக்குமதிகள் கணிசமான அளவு குறைந்துள்ளது




டொலரின் சரிவின் காரணமாக, இலங்கையின் இறக்குமதிகள் கணிசமான அளவு குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை- மித்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் நிலவும் வரி நெருக்கடிக்கு டொலர் பற்றாக்குறையே காரணம். டொலர்களை கொண்டுவருவதற்கான நிலையான பாதையை இலங்கை இன்னும் உருவாக்கவில்லை.

 இதன் மூலம் சுங்க வரி மற்றும் ஏனைய வரிகள் மூலம் ஈட்டப்படும் வருமானம் நேரடியாக பாதிக்கப்படுகிறது. அத்துடன் சுங்க வரிகள் மற்றும் வரிகளில் இருந்து இழந்த பணத்தை சம்பாதிப்பதற்காக, மற்ற வரிகள் அதிகரிக்கப்படுகின்றன என மேலும் தெரிவித்தார். 

No comments