குரங்குகள் விவகாரம் குறித்து அரச மட்டத்தில் பேச்சு இல்லையாம்


இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில் எவ்வித பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரு நாட்டு அரச மட்டத்தில் எந்த பேச்சுக்களும் நடத்தப்படவில்லை. தனியார் நிறுவனமொன்றே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது என தெரிவித்தார். 

No comments