கைதடியில் விபத்து - பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரான குருநாகலை சேர்ந்த ஆர்.எம்.குணரத்ன (வயது54) என்பவரே உயிரிழந்துள்ளார்.  

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற இ.போ.ச பேருந்தின் பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த பொலிஸார் அதிகாரி பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளான நிலையில், எதிர் திசையில் வந்த லொறி பொலிஸ் அதிகாரி மீது மோதியதாக  தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் பேருந்து சாரதி மற்றும் லொறி சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

No comments