நெடுந்தீவு ஐந்து கொலை - புங்குடுதீவு வாசி பொலிஸாரின் தீவிர விசாரணைக்குள்


நெடுந்தீவு படுகொலை தொடர்பில் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டு பொலிஸாரினால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வெளிநாட்டு ஒன்றில் இருந்து, அந்நாட்டினால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட புங்குடுதீவை சேர்ந்த நபர் ஒருவர் , நெடுந்தீவில் உள்ள முதியவர் வீட்டிற்கு வந்து சென்றதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை பொலிஸார் அழைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 


No comments