உத்தரவை மீறி சென்ற காரின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்


பொல்கஹவெல நீதிமன்றத்திற்கு அருகில், உத்தரவை மீறிச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

ஹெரோயின் போதைப்பொருளை கடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று காரை நிறுத்த முற்பட்டுள்ளனர்.

ஆனால் பொலிஸ் அதிகாரிகளை மீறி காரை ஓட்டிச் சென்றதால், ​​பொலிஸார் காரை நோக்கிச் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் காரின் டயருக்கு சேதம் ஏற்பட்டது.

சுமார் ஒரு கிலோ மீற்றர் வரை சென்ற காரை பொலிஸார் பின் தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்தி, அதில் இருந்த மூவரை கைது செய்துள்ளனர். 

No comments