ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்


முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக இன்று திருத்தப்பட்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு மோதர மீன்பிடி துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு குறைந்த விலைக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதற்காக இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே திருத்தப்பட்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து ஆவணங்களையும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழங்கவில்லை என பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

அதன்படி, இந்த வழக்கை ஜூன் 16-ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டார்.

No comments