பொலிகண்டியில் 84 கிலோ கஞ்சா மீட்பு


யாழ்ப்பாணம் பொலிகண்டி கடற்கரையை அண்டிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 84 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. 

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு விரைந்த கடற்படையினர் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிசாரிடம் கஞ்சாவை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments