மருத்துவமனையில் போப் பிரான்சிஸ்


போப் பிரான்சிஸ் சுவாசத் தொற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போப் பிரான்சிஸ்சுக்கு கடந்த சில நாட்களாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததாகவும், ஆனால் கொரோனா அறிகுறி எதுவும் தென்படவில்லை என்றும் வாட்டிகன் தெரிவித்துள்ளது.

தற்போது ரோமில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போப் பிரான்சிஸ், சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டியிருக்கும் என்றும் வாடிகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே போப் பிரான்சிஸ் சமீப காலமாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்ததால் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments