பாதுகாப்புக் காரணம்: வலைத் தளங்களைக் கட்டுப்படுத்துமாறு பிரான்சில் நாடாளுமன்றில் வலியுறுத்தல்!


பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீனாவில் உள்ள பைட்டான்ஸ் நிறுவனத்தின் டிக்-டாக் செயலிக்கு பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்தன. அதன்படி பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் டிக்-டாக் செயலியை அரசின் மின்னணு சாதனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

இவை தனியுரிமையை மீறுவதாக குற்றச்சாட்டு இருந்தது. அதுபோல ரஷியாவில் டிக்-டாக், ஸ்னப்-சாட், டெலிகிராம், வாட்ஸ் அப் போன்றவை பயங்கரவாத செயலிகளாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் தனது நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா மற்றும் சீன நிறுவனத்தின் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் என பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

No comments