பண்டாரவளை – பூனாகலை கபரகல மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதம்


பண்டாரவளை – பூனாகலை கபரகல தோட்டத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அடை மழை பெய்துள்ளதால் கபரகலை தோட்ட வைத்தியசாலை அமைந்துள்ள பகுதியிலேயே மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றுள்ளது

இதன் காரணமாக பண்டாரவளை – பூனாகலை கபரகல தோட்டத்தில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளன.

அத்துடன், எழுவர் காயமடைந்துள்ளதோடு உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காயமடைந்த எழுவரில் இருவர் கொஸ்லந்த வைத்தியசாலையிலும், இருவர் தியதலாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள 62 குடும்பங்களைச் சேர்ந்த 220 இற்கும் மேற்பட்டோர் பூனாகலை இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த மண்சரிவால் ஏற்பட்ட மீட்பு பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றதோடு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று இன்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments