கடலட்டை பண்ணை தேவையில்லை!

 


விஞ்ஞான ஆய்வின் படி வடபகுதியில் கடல் அட்டை பண்ணைகள் அமைப்பது இயற்கை வளத்தை பாதிக்கும் என தேசிய மீனவர் இயக்கத்தின் இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் மீண்டும் தெரிவித்துள்ளார்.

கடலட்டைப்பண்ணையினால் பாதிக்கப்படுகிற வட மாகாண  மீனவ பிரதிநிதிகளை உள்ளடக்கி கலந்துரையாடல் ஒன்று இன்று நடத்தப்பட்டிருந்தது

கலந்துரையாடலில் கடலட்டை பண்ணை மீனவர்களுக்கு சாதகமானதா பாதகமாக இருக்கின்றதா என அட்டைப் பண்ணை தொடர்பில்  ஆராயப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்த விஞ்ஞானபூர்வமான கருத்தின்படி இலங்கை கடற்பரப்புக்குள் குறிப்பாக வடபகுதியில் அட்டப்பண்ணை உருவாக்குவது ஒரு முறையற்ற விடயமாக அது மீனவர்களுடைய எதிர்கால வாழ்வை பாதிக்கின்ற ஒரு விடயமாக கலந்துரையாடப்பட்டது

கலந்துரையாடலில் இறுதியிலே எடுக்கப்பட்ட முடிவானது வடபகுதியிலே மேற்கொள்ளப்படுகின்ற அட்டைப்பண்ணைகள் பாரம்பரிய மீன்பிடி முறைக்கு எதிரானதாகவும் இயற்கை வளங்களை அளிக்கின்றதாகவும் மீன்கள் புலம்பெயரும்  இடங்களை தடுக்கின்ற மீன்கள் முட்டையிடுகின்ற குஞ்சு பொரிக்கின்ற இடங்கள் மறுக்கப்படுகின்றதாக காணப்படுகிறது

தொடர்ச்சியாக இலங்கையில் வடபகுதியில் 17 விதமான அட்டைகள் காணப் படுகின்றன அந்த அட்டைகள் அழிக்கப்படுவதற்கு இந்த அட்டை பண்ணைகள் ஒரு காரணமாக இருக்கும் என முடிவெடுக்கப்பட்டது.

ஆகவே தொடர்பாக அமைச்சர் அவர்களும் ஏனைய நக்ரா  நாறா  நிறுவனங்கள் கடற் தொழில் பரிசோதர்கள் இது தொடர்பில்  ஆழமான ஆய்வு செய்து உடனடியாக இந்த அட்டபண்ணைகளை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்

முக்கியமாக சீனாவின் உடைய அட்டை குஞ்சுகளை கொண்டு வந்து தான் இந்த அட்டை பண்ணைகளிலே அட்டைகள் வளர்க்கப்படுகின்றன இச்செயற்பாடு  கலப்பு முறையான ஒரு செயற்பாடாக காணப்படுகின்றது . சாதாரணமாக வடபகுதியில் இருக்கின்ற இயற்கையாக உருவாகின்ற அட்டைகளின் உடைய அழிவுக்கு இது காரணமாக இருக்கின்றதென தேசிய மீனவர் இயக்கத்தின் இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் மீண்டும் தெரிவித்துள்ளார்.


No comments