வெளிநாட்டு மாலுமிகள் இருவர் இலங்கை கடற்பரப்பில் உயிரிழப்பு


வெளிநாட்டு மாலுமிகள் இருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காலி துறைமுக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

எகிப்தில் இருந்து இந்தியா நோக்கிச் சென்ற சரக்குக் கப்பலில் பணிபுரிந்த இரு மாலுமிகள் சர்வதேச கடலில் உயிரிழந்துள்ளதாக நேற்றைய தினம் புதன்கிழமை கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உக்ரைனியர்களான 41 மற்றும் 53 வயதுடைய இரண்டு மாலுமிகளே உயிரிழந்துள்ளனர்.

குறித்த கப்பல் தற்போது காலி துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தோர் தொடர்பான தகவல்கள் காலி நீதவானிடம் தெரிவிக்கப்பட்டு சடலங்களை தரையிறக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


No comments