நீதி கோருகிறார் வேலன் சுவாமிகள்!



பொலிசாரால் கைது செய்யப்பட்டமைக்கு நீதி கோரி இன்று மதியம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில்  முறைப்பாடு ஒன்றினை வேலன் சுவாமிகள்  பதிவுசெய்துள்ளார்

கடந்த 15 ஆம் திகதி நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது ஜனநாயக ரீதியில் போராட்டத்தில்ஈடுபட்ட தன்னை வன்முறையை தூண்டியமை அதிகளவு ஆட்களை கூட்டியமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி பொலிசாரால் கைது செய்யப்பட்டமைக்கு நீதி கோரி இன்று மதியம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில்  முறைப்பாடு ஒன்றினை பதிவுசெய்துள்ளார்.

கடந்த வாரம் கைது செய்யப்பட்டுயாழ் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட வேலன் சுவாமிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் அவரது வழக்கு விசாரணைக்கு எடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது,

No comments