யாழ். மாநகர சபைக்கு புதிய முதல்வர்?



யாழ். மாநகர சபைக்கு புதிய முதல்வர் தேர்வு தொடர்பில் குழப்பங்கள் தொடர்கின்றது.

புதிய முதல்வராக ஒரு சில நாட்கள் கதிரையிலிருக்க பலரும் பின்னடித்துவருகின்ற நிலையில் எவ்வாறேனும் வரவு செலவு திட்டத்தை வெல்ல வைக்க மணிவண்ணன் எதிர்தரப்புக்கள் மும்முரமாகியுள்ளன.

இதனிடையே முதல்வர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.

விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ். மாநகர சபை முதல்வர் பதவியை நேற்று (31) இரவு முதல் இராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ். மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

இது தொடர்பில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் கருத்து தெரிவிக்கையில், மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் படி இனி மேயர் தெரிவை மேற்கொள்ள முடியாது. சபையை கலைப்பது தொடர்பாக நான் தீர்மானிக்க முடியாது.  அது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும். கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ள நிலையில் இன்னமும் அங்கும் பதில் கிடைக்கவில்லை என விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் இறுதி தீர்மானம் வடமாகாண ஆளுநர் பக்கம் சென்றுள்ளது.

எனினும் தமிழரசு ஒரு புறமும் ஈபிடிபி இன்னொருபுறமுமாக ஆட்சியமைக்க மும்முரமாகியுள்ளன.

எனினும் உள்ளுராட்சி சபைகள் எந்நேரமும் கலைக்கப்படக்கூடிய சூழலில் புதிய முதல்வர் கதிரையேற பலரும் பின்னடித்தே வருகின்றனர்.


No comments