யாழில். ஈ.பி.டி.பி கட்டுப்பணம் செலுத்தியது!


ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் வெள்ளிக்கிழமை செலுத்தியது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் வடக்குமாணசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தலைமையிலான குழுவினரால் யாழ் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

மேலும் இதுவரை யாழ் மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளும் 4 சுயேட்சைக் குழுக்களும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

No comments