தேர்தலோ தேர்தல்!



இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் திகதி உட்பட பல தீர்மானங்களை எட்டுவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று காலை கூடியது.

மேலும், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், தபால் மா அதிபர், அரச அச்சக அலுவலர் உள்ளிட்டோர் இன்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஆலோசிப்பதற்காகவே இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2023 மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானி அறிவித்தல் 2023 ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.


தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் 2023 மார்ச் 20 ஆம் திகதிக்குள் வர்த்தமானி மூலம் வெளியிடப்படும்.

No comments