மோசடி சதி விசாரணையை முடக்க முயற்சியா?



கிளிநொச்சி வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலையில் கொரோனா பெருந்தொற்றின் போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான விசாரணைகளை முடக்க முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

மோசடி தொடர்பிலான ஆரம்ப விசாரணைகள்  மூலம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீது குற்றம் காணப்பட்டதாக வடக்கு சுகாதார செயலாளர் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்திருந்தார்.இதனைத்  தொடர்ந்து இடமாற்றப்பட்ட வைத்தியர் சரவணபவன் மீண்டும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த ஆரம்ப விசாரணைகள்  இன்னமும் முடிவடையவில்லை என மத்திய சுகாதார அமைச்சுக்கு மாகாண உயரதிகாரிகள் எழுத்து மூலமாக அறிவித்ததை அடுத்து மீள் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கிளிநொச்சி வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில்  ஆரம்ப புலனாய்வு  மெற்கொள்வதற்காக மூவரடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டிருந்தது. குழு தனது விசாரணை அறிக்கையில் கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர், அதன் முன்னாள் கணக்காளர்,மற்றும் மூன்று உத்தியோகத்தர்களும் மீதும் குற்றம் புரிந்துள்ளதனை இனம் கண்டுள்ளதாக தமது அறிக்கையினை சமர்பித்திருந்தது.

இந்த நிலையில் கணக்காளர் ஏற்கனவே இடமாற்றம் பெற்று சென்றுள்ள நிலையில் ஏனைய உத்தியோகத்தர்களில் இருவர் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் பெற்று சென்றுவிட்ட நிலையில் கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் விசாரணைகள் நிறைவு பெறும் தற்காலிக இணைப்பு வழங்கப்பட்டிருந்து. 

தற்போது தற்காலிக இணைப்பு இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் அவர் கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 


No comments