தும்பளையில் மதில் இடிந்து விழுந்ததில் இளைஞன் உயிரிழப்பு!


யாழ்ப்பாணம் தும்பளை பகுதியில் மதில் இடிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தும்பளை செம்மண்பிட்டி பகுதியை சேர்ந்த விக்னராஜா கிருஷ்ணன் (வயது 32) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். 

வீட்டின் மதில் ஏறி நின்ற போது , மதில் விழுந்ததில் , மதிலுடன் சேர்ந்து விழுந்ததில் தலையில் படுகாயமடைந்த நிலையில் , பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் , அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

No comments