அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட முற்பணம்


அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட முற்பணம் செலுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2023 ஆம் ஆண்டு அரச அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 4,000 ரூபாய்க்கு உட்பட்டு இந்த சிறப்பு முற்பணத்தை செலுத்த அரசு முடிவு செய்துள்ளது.

பொது நிர்வாக அமைச்சு அனைத்து அமைச்சுகள், உள்ளூராட்சிகள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

இந்த முற்பணம் செலுத்தும் நடவடிக்கை 01.01.2023 அன்று ஆரம்பமாக 28.02.2023 அன்று முடிவடையவுள்ளது.

No comments