அச்சுவேலியில் வீடொன்றின் மீது தாக்குதல் ; ஜன்னல் கண்ணாடிகள் சேதம்!


யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வீடொன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது 

அச்சுவேலி பாரதி வீதியில் உள்ள வீடொன்றின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. 

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments